விருதுநகர் பைக் ஷோரூமில் மெக்கானிக் விரல்கள் துண்டிப்பு

விருதுநகர், ஏப். 28: விருதுநகர் கச்சேரி ரோட்டில் தனியார் பைக் விற்பனை நிறுவனம் மற்றும் ஒர்க் ஷாப் உள்ளது. ஒர்க் ஷாப்பில் பாவாலியை சேர்ந்த மதிவாணன்(28) மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். ஏப். 9 அன்று நிறுவன மேலாளர் சண்முகம், பணியாளர்கள் மதிவாணன் மற்றும் சதாம் இருவரையும் ஒரு டன் எடையுள்ள கழிவு ஆயில் டிரம்மை தூக்கி வண்டியில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இருவரால் கழிவு ஆயில் டிரம்மை தூக்க முடியாது என கூறியுள்ளனர். இந்நிலையில் டிரம்மை தூக்கி வண்டியில் வைக்குமாறு மேலாளர் எச்சரித்துள்ளார் மதிவாணன், சதாம் இருவரும் டிரம்மை தூக்கி லோடு வேனில் வைத்தபோது, டிரம் கை நழுவியதில் மதிவாணன் இடது கையில் மூன்று விரல்கள் துண்டாகியது. இதுகுறித்து மதிவாணன் புகாரில், விருதுநகர் மேற்கு போலீசார் மேலாளர் சண்முகம் மற்றும் உரிமையாளர் ஹரிபாலன் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: