போடி, ஏப். 21: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி தர்மத்துபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 80 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 7 பேர் பணியில் உள்ளனர். இப்பள்ளி வளாகத்தில் 3 வகுப்புகள் கொண்ட கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் முழுவதும் பழுதாகி மழை பெய்யும் தண்ணீர் ஒழுகுகின்றது. இதனால் மாணவ, மாணவிகள் அவ்வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாமல் போனது. இதையடுத்து அக்கட்டிடத்தை பயன்படுத்தாமல் அடைத்து விட்டு, அருகிலுள்ள வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.