மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை நிராகரிக்க வேண்டும்

ஈரோடு, ஏப். 21: ஒன்றிய அரசின் மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர்நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூரம்பட்டி நால்ரோட்டில்  நடந்த  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் ஷேக்தாவூத் (எ) கண்மணி தலைமை வகித்தார்.

சிஐடியூ மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கனகராஜ், துணைச்செயலாளர் பொன்.பாரதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், 8 மடங்கு உயர்த்தி உள்ள எப்.சி. கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தாமதத்துக்கு நாளொன்றுக்கு ரூ. 50 அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். தினமும் உயர்த்தப்பட்டு வரும் பெட் ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும். 10 வருட பழைய ஆட்டோவுக்கு 10 மடங்கு எப்.சி. கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்.

எதிர்பாராத சிறிய விபத்துகளுக்கும் ஓட்டுனர் உரிமம் பறிப்பு, வாகனம் பறிமுதல், சிறை தண்டனை எனும் நியாயமற்ற சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மோட்டார் வாகனச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை நிராகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில், திரளான ஆட்டோ, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: