கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர் நாள் கூட்டம்

திருவாரூர், ஏப்.19: திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 176 மனுக்கள் குவிந்தன. திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 176 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளுமாறு உத்தரவிட்டார். மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: