ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி, ஏப்.19: பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி பூத்திருவிழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. தேரோட்டத்தில் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருள தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. விழாவில் விடத்தலாம்பட்டி, ரெகுநாதபட்டி, வைரம்பட்டி, சீகம்பட்டி, கோபால்பட்டி, கிழவயல், கட்டுக்குடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். உலகம்பட்டி போலீசார் பாதுகாப்பினை செய்திருந்தனர்.

Related Stories: