கல்வி, மருத்துவ நலத்திட்ட உதவி காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர், செல்வப்பெருந்தகை பிறந்தநாள் விழா

கோவை, ஏப். 13: சட்டமேதை அம்பேத்கர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோரது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகராட்சி 74வது வார்டு கவுன்சிலர் ஏ.எஸ்.ஷங்கர் விடுத்துள்ள அறிக்கை:

அம்பேத்கர், செல்வப்பெருந்தகை ஆகியோரின் பிறந்தநாளையொட்டி இன்று காலை கோவை, பூசாரிபாளையத்தில் எனது தலைமையில் 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடக்கிறது.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கருப்புசாமி முன்னிலை வகிக்க, மாநில செயல் தலைவர் மயூரா. ஜெயக்குமார் அலுவலகத்தை திறந்து வைத்து, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மாநில, மாவட்ட, சர்க்கிள், டிவிசன் நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொள்கிறார்கள். செல்வப்பெருந்தகையின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. 57 மரக்கன்று நடப்படுகிறது. இதில் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: