முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்த மான்கள் கூட்டம்

பந்தலூர், ஏப்.8:  கூடலூர்  அருகே முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் சுற்றியுள்ள வனப்பகுதியில் யானைகள், மான்கள் கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கோடை வெயிலின்  தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் செடி, கொடி காய்ந்து  காணப்படுகிறது. இதனால் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இறைத்தேடி  நெடுஞ்சாலையோரத்தில் அதிகளவில் காணப்படுகிறது. அந்த வழியே வரும்  வாகன ஓட்டிகள் மான்கள் கூட்டத்தை பார்த்து ரசிப்பதற்காக வாகனங்களை  நிறுத்தி செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்து   செல்கின்றனர்.

Related Stories: