கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

திருச்சி, ஏப்.2: திருச்சி மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற கார்த்திகேயன் பொதுமக்களின் நலனை பேணிகாக்கும் வகையில் தீவிர ரோந்து செல்லவும், கஞ்சா, போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதில் கடந்த பிப்.21ம் தேதி எ.புதூர் அன்பு நகர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்ற குமார்(எ)வெள்ளெலி குமார் என்பவரை எ.புதூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 27க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. தொடர்ந்து சிறையில் உள்ள குமார் குற்றம் செய்யும் எண்ணம் உடையவர் என்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடக்கோரி கமிஷனருக்கு எ.புதூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற மாநகர கமிஷனர் கார்த்திகேயன், சிறையில் உள்ள குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதற்கான நகலை சிறையில் உள்ள குமாரிடம் போலீசார் வழங்கினர்.

Related Stories: