கிருஷ்ணராயபுரம், ஏப்2:கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரத்தில் டேங்கர் லாரி -அரசு பஸ் -தாய் சேய் நல வேன் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் 7பேர் படுகாயம் அடைந்தனர். மும்பையைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் மகன் அகிலேஷ்குமார் (25 ).இவர் நேற்று முன்தினம் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி டேங்கர் லாரி ஒன்றை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.அப்போது அரசு பேருந்து ஒன்று திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் அருகே சென்ற போது முன்னால் சென்ற டேங்கர் லாரி திடீரென நின்றதால் அரசு பஸ் லாரி மீது மோதி நின்றது. பின்னால் வந்த தாய் சேய் நல வேன் பின்பக்கம் மோதியது.