மாமல்லபுரம்: பூஞ்சேரி இசிஆர் சாலையில், சிறுவர் பூங்கா பல ஆண்டுகளாக பராமரிக்காமல் அடர்ந்த முட்செடிகள் முளைத்து காடுபோல் காட்சியளித்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, அதனை சீரமைத்து சிறுவர்கள் பயன்பாட்டுக்கு பேரூராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது. மாமல்லபுரம் பேரூராட்சி பூஞ்சேரி இசிஆர் சாலை, தனியார் மருத்துவமனை அருகே சிறுவர் பூங்கா உள்ளது. இதனை, பேரூராட்சி அதிகாரிகள் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கவில்லை. இதனால், பூங்காவில் அடர்ந்த முட்செடிகள் அதிகமாக வளர்ந்து காடு போல் காட்சியளித்தது. அதில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகளவில் உலா வந்தன.