நெல்லை, மார்ச் 24: பாலிசி சேவைக்காக நெல்லை கோட்டத்தில் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதாக எல்ஐசி நெல்லை கோட்ட முதுநிலை மேலாளர் தெரிவித்துள்ளார். நெல்லை கோட்ட எல்ஐசி அலுவலகத்தின் நவீனப்படுத்தப்பட்ட கட்டிட சேவையை தென் மண்டல மேலாளர் கதிரேசன் நேற்று துவக்கி வைத்தார். விழாவில் நெல்லை கோட்ட முதுநிலை மேலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றுப் பேசுகையில், நெல்லை கோட்டம் துவங்கி 30வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. புதுவணிக செயல்பாட்டில் மட்டுமல்லாது வாடிக்கையாளர் சேவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாலிசி சேவையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் இயக்கத்தின் மூலம் நெல்லை கோட்டத்தில் சுமார் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டோம் என்றார்.