காரியாபட்டி, மார்ச் 19: தூத்துக்குடியில் இருந்து மதுரை அறுவை மில்லுக்கு கழிவு அட்டையை தூத்துக்குடியை சேர்ந்த மகாராஜா என்பவர் மினிசரக்கு வாகனத்தில் ஏற்றி வந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி அருகே செவல்பட்டி பகுதியில் வந்த போது, திடீரென வேனின் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட மகாராஜா வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் மூலம் தீயை அணைக்க முயன்றுள்ளார்.