பெரியகுளம், மார்ச் 15: பெரியகுளம் அருகே வடுகபட்டி கன்னிமார் கோயில் தெருவை சேர்ந்தவர் சௌமியா (19). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாண்டி (28)க்கும் கடந்த 28 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ் பாண்டி கடந்த 2011ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து ட்ரெயினிங் முடித்து நாயக்காக கோவையிலுள்ள ராணுவ முகாமில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தற்போது இவர் திருமணத்திற்காக விடுமுறை எடுத்து ஊருக்கு வந்துள்ளார்.