ஏரல் பேரூராட்சி தலைவராக சர்மிளாதேவி துணைத்தலைவராக ஜான்ரத்தினபாண்டி தேர்வு

ஏரல், மார்ச்.5: ஏரல் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சர்மிளாதேவியும், துணைத் தலைவராக திமுக ஜான்ரத்தினபாண்டியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஏரல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 7 இடங்களிலும், காங். 1 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. அமமுக 5 இடங்களையும், அதிமுக 2 இடத்தையும் பிடித்திருந்தது. தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் தலைவராக ஏரல் பேரூராட்சியின் முன்னாள் துணைத்தலைவரும், திமுக ஒன்றிய பிரதிநிதியுமான மணிவண்ணனின் மனைவி சர்மிளாதேவியும், துணைத்தலைவராக திருவழுதிநாடார்விளை திமுக பிரதிநிதி தொழிலதிபர் ஜான்ரத்தினபாண்டியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை திமுக நிர்வாகிகள், வியாபாரிகள், கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்கள் வாழ்த்தினர்.

Related Stories: