அரியலூர், மார்ச்2: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே லாரியும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர்,நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர். அரியலூரிலிருந்து வி.கைகாட்டி வழியாக கோட்டியால் கிராமத்துக்கு அரசு நகரப்பேருந்து ஒன்று நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை அணிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன்(56) பேருந்தை ஓட்டிச் சென்றார். நடத்துனராக சாவடிக்காடு கிராமத்தை சேர்ந்த குமார்(50) பணியில் இருந்தார். பேருந்து வி.கைகாட்டி அருகேயுள்ள கா.கைகாட்டி அருகில் சென்றபோது, எதிரே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியது.