சிவகங்கை, மார்ச் 1: கல்லல் அருகே பாகனேரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. திமுக பொதுக்குழு உறுப்பினர் பிடிஆர்.முத்து தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாநில இலக்கிய அணித் தலைவர் தென்னவன் மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மாலை, துண்டு அணிவித்து கவுரவித்து அழைத்து வரப்பட்டனர்.