கோவில்பட்டி, பிப்.22: மயானம் அமைத்து தரக்கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விளாத்திகுளம் வட்டம் மெட்டில்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மக்கள் தனி மயானம் அமைத்து தரக்கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை வகித்தார். புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி, மாவட்ட துணைச்செயலாளர் பீமாராவ், மாவட்ட இளம் புலிகள் அணி செயலாளர் தமிழரசு, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் பாண்டி, ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க தலைவர் செண்பகராஜ், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.