திருச்சி, பிப். 12: திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் கிராம ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா தொடங்கி வைத்தார். இதில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் ஆகிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 599 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.