அலங்காநல்லூர், பிப்.11: அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி கிராமத்தில் சோணை கருப்பணசுவாமி திருக்கோவில் உற்சவ விழா நடைபெற்றது. கடந்த 3 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளில் அம்மச்சி அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மாலையில் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரண்டாவது நாளில் கோவில்பாப்பாகுடி திருக்கண் மண்டபத்தில் சோனை கருப்பண்ணசுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.