குடியாத்தம், பிப்.12: குடியாத்தம் அருகே அதிகாலையில் கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டினர்.வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளது. இதனால், அங்குள்ள யானைகள் குடியாத்தம் வனச்சரகத்திற்குள் அவ்வப்போது நுழைவது வழக்கம். அப்போது தமிழக யானைகளுடன், ஆந்திர யானைகளுக்கு பயங்கர சண்டை ஏற்படும். இதில் ஆந்திர யானைகள் குடியாத்தம் வனச்சரகத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவிடுகிறது.