கிருஷ்ணராயபுரம் அருகே பைக் மீது ஆட்ேடா மோதல் கணவன், மனைவி படுகாயம்

கிருஷ்ணராயபுரம், ஜன.31: கிருஷ்ணராயபுரம் அருகே கே.பேட்டையை சேர்ந்தவர் திருமுருகன் (50). இவரது மனைவி விமலா (43). சம்பவத்தன்று இருவரும் பைக்கில் சொந்த வேலையாக திருச்சி சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது கே -பேட்டை அருகே கரூர் தாந்தோன்றிமலை சேர்ந்த சிங்கமுகம் என்கின்ற விஜயசிங்கம் (50) ஒட்டி வந்த ஆட்டோ பைக்கின் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து: கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் செந்தில்குமார் (50), மற்றும் பொய்கைபுதூரை சேர்ந்த விஸ்வநாதன் மகள் மதுக்கரைவேணி (29). இருவரும் பைக்கில் செல்லும்போது கிருஷ்ணராயபுரத்தில் லாலாபேட்டை புதுத்தெருவைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி (38) ஓட்டி வந்த பைக் இவர்கள் பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக கரூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: