திருச்சி, ஜன. 29: திருச்சி ஒத்தக்கடையில் உள்ள நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் அலுவலகம் முன் பொதுத்துறை இன்ஸ்சூரன்ஸ் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கம் கூட்டுக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க தலைவர் தரன் தலைமை வகித்தார். மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத்தலைவர் ராஜமகேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அரசு துறை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்,