தேர்தல் விதிமுறைபடி வெள்ளை கோடு மனோராவில் மீனவர்களுக்கு தொழில் விழிப்புணர்வு முகாம்

பேராவூரணி,ஜன.29: பேராவூரணி அருகே உள்ள சுற்றுலா தலமான மனோராவில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாஜக சார்பில் மீனவர்களுக்கு தொழில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியநாயகி தலைமை வகித்தார். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜிசிவராஜ், மத்திய மீன்வள ஆராய்ச்சித்துறை விஞ்ஞானிகள் தமிழ்மணி, ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கடல்பாசி வளர்க்கும் முறை, அதன் மூலம் மீனவர்கள் வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள் பற்றி மீனவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. முகாமில் இளம் விஞ்ஞானி மோகன்ராஜ், மனோரா, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: