பேராவூரணி,ஜன.29: பேராவூரணி அருகே உள்ள சுற்றுலா தலமான மனோராவில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாஜக சார்பில் மீனவர்களுக்கு தொழில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியநாயகி தலைமை வகித்தார். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜிசிவராஜ், மத்திய மீன்வள ஆராய்ச்சித்துறை விஞ்ஞானிகள் தமிழ்மணி, ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.