வத்தலக்குண்டு, ஜன. 29: வத்தலக்குண்டுவில் இரண்டு கடைகளை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வத்தலக்குண்டு கடைவீதியில் தேவதானப்பட்டியை சேர்ந்த ஜாபர்சாதிக் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஷட்டரை திறந்து உள்ளே பார்த்தபோது ரூ. 1 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த பதினைந்தாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.