உடன்குடி, ஜன. 28: உடன்குடி யூனியன் அடிப்படை வசதி, தேவைகள் குறித்து யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் செட்டியாபத்து பாலமுருகன், வெள்ளாளன்விளை ராஜரத்தினம் . செம்மறிகுளம் அகஸ்டா மரிய தங்கம், மெஞ்ஞானபுரம் கிருபா ராஜபிரபு, சீர்காட்சி கருணாகரன், நயினார்பத்து அமுதவல்லி, லெட்சுமிபுரம் ஆதிலிங்கம் உள்ளிட்டோருடன் தமிழக மீனவர்நலம், மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், யூனியன் பகுதிகளுக்கான அடிப்படை வசதி, தேவைகள் குறித்து கலந்துரையாடியதோடு பல்வேறு குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாகத் தொடர்புகொண்டு விவரம் கேட்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். குறிப்பாக குடிநீர் விநியோகம் தங்குதடையின்றி விநியோகிக்க