கல்லிடைக்குறிச்சியில் மகளை பார்க்க வந்த முதியவர் பாம்பு கடித்து பரிதாப பலி

அம்பை, ஜன. 26:  கல்லிடைக்குறிச்சியில் மகளை பார்க்க வந்த முதியவர் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார். நெல்லை  மாவட்டம் திடியூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (55). கல்லிடைக்குறிச்சியில் திருமணமாகி ஆட்டுத்தட்டை தெருவில் வசித்து வரும் இவரது மகள் கோகிலா என்பவரை பார்க்க நேற்று முன்தினம் வந்தார். பின்னர் தெற்கு புதுதெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு  புறப்பட்டார். இரவில் போதிய வெளிச்சம் இன்றி இருட்டு மண்டிக்கிடந்த தெரு வழியே சென்றபோது பாம்பு ஒன்று கடித்தது. வலியால் பாதிக்கப்பட்ட அவர் சிறிது  நேரத்தில்  மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: