இளம்பெண்கள் மாயம்

காரியாபட்டி: காரியாபட்டி அருகே இளம்பெண் மாயமானார். காரியாபட்டி அருகே உள்ள அல்லாளப்பேரி ஒத்தவீட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் வான்மதி. நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து காரியாபட்டி காவல் நிலையத்தில் பெரியசாமி புகார் அளித்தார். புகாரின்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்காள் மகள் காயத்ரி. இவர் மேலேந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள இயற்கை வேளாண்மை பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் சின்னக்காள் நரிக்குடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: