தீ விபத்தில் பெண் பலி

கோபால்பட்டி: திண்டுக்கல்லை  அடுத்த கொசவபட்டியை சேர்ந்தவர் ஜோசப் பன்னீர்செல்வம். கூலித்தொழிலாளி.  இவரது மனைவி ஆரோக்கிய ராணி (33). இவர் கடந்த 19ம் தேதி சமையல் செய்வதற்காக  விறகு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த  உடையில் தீப்பிடித்தது. இதையடுத்து, உடல் முழுவதும் தீ பரவியது. இதனால்,  ஆரோக்கிய ராணி எரிச்சல் தாங்காமல் அலறினார். அங்கிருந்த ஜோசப்  பன்னீர்செல்வம் ஓடிவந்து அவரை மீட்க முயற்சி செய்தார். அப்போது அவருக்கும்  தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு  சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர்  ஆரோக்கிய ராணி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் நேற்று ஆரோக்கிய ராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து  விசாரிக்கின்றனர்.

Related Stories: