சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி வில்லியார் கோயில் ஊரணி பகுதியில் இடையபட்டியை சேர்ந்த தமிழரசன்(37), அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். அவ்வழியாக ரோந்து சென்ற புழுதிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் நாசர், தமிழரசனிடமிருந்து 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.