பழநி: பழநியில் நடந்த மாஸ் ஒருங்கிணைந்த மருத்துவமனையின் திறப்பு விழா நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பழநி அடிவாரம், தெற்கு கிரிவீதியில் தவத்திரு சாது நந்தி அடிகளார் ஆசிரம வளாகத்தில் தவத்திரு சாது நந்தி அடிகளார் மாஸ் ஒருங்கிணைந்த மருத்துவமனையின் கட்டிட திறப்பு விழா நடந்தது. பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார். டாக்டர்கள் சங்கீதா ராமநாதன், அரசு ஆகியோர் வரவேற்றனர். பேரூர் ஆதீனம் சுந்தரலிங்க மருதாசல அடிகளார், திரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், தேன்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.