உச்சிப்புளி அருகே காருக்கு தீ வைப்பு?

ராமநாதபுரம், ஜன. 22: உச்சிப்புளி அருகே தாமரைக்குளம் அம்மாபட்டினத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் துபாயில் உள்ளார். இவரது மனைவி குணவதி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார் வாங்கினார். வீடு அருகே ஷெட் போட்டு காரை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜன.19 இரவு நிறுத்திய காரை மறுநாள் காலையில் பார்த்த போது தீப்பிடித்து எரிந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து குணவதி உச்சிப்புளி போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து யாரேனும் காருக்கு தீ வைத்தனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: