மதுவில் விஷம் கலந்து வாலிபர் தற்கொலை

திருப்புத்தூர், ஜன.21: திருப்புத்தூர் அருகே நெடுமறம் புதூர் கண்மாய் பகுதியில் நேற்று காலையில் ஆண் ஒருவர் இறந்துகிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது, இறந்தவர் தேவகோட்டை ராம்நகர் எழுவன்கோட்டையைச் சேர்ந்த அழகர்சாமி மகன் குமார்(53) என்றும், இவர் பெயிண்டர் என்றும் தெரியவந்தது. மேலும் குமார் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருப்புத்தூர் நகர் காவல் நிலைய எஸ்.ஐ மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: