குலசேகரம், ஜன. 21: குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டன.குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த சித்திரங்கோட்டில் இருந்து வேர்க்கிளம்பி, சுவாமியார்மடம் செல்லும் சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கல், எம் சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றி செல்கின்றன. இவற்றில் பெரும்பான்மையான வாகனங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் பாரம் ஏற்றி செல்லப்படத்தாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி, விபத்து போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் இந்த வாகனங்களால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ேமலும் இந்த வாகனங்களால் சாலைகள் அடிக்கடி பழுதடைந்தும் வருகின்றன.எனவே அதிக பாரம் ஏற்றிக்ெகாண்டு ேவகமாக ெசல்லும் கனரக வாகனங்களை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் நீண்டநாள் கோரிக்கை உள்ளது.