நாகர்கோவில், ஜன.20: குமரி மாவட்ட நில அளவைத்துறையின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டம் புத்தளம் கிராமத்தில் தற்போது நடைபெற்றுவரும் மறுநில அளவைப்பணிகளில், உட்பிரிவுகளுடன் கூடிய அளவுப்பணி மற்றும் விசாரணைப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில், அகஸ்தீஸ்வரம் தாலுகா, புத்தளம் கிராமத்தில் உட்பிரிவுகளுடன் கூடிய அளவுப்பணி மற்றும் விசாரணைப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார். அப்போது, அளவுப்பணிகள் நடைபெறும் வீதம், உபகரணங்கள் பயன்பாடு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு குறித்தும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய வழிமுறைகள் குறித்தும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.