இளம்பெண்ணை மறித்து ஆபாச பேச்சு

காரைக்கால், ஜன.19:  காரைக்கால் பிரபு நகரில் வசிப்பவர் மணிகண்டன். இவரது மனைவி ராணி(35). கடந்த மாட்டுப்பொங்கலன்று தனது மகள்கள் பிரியதர்சினி(18), ரஞ்சனி(16). தம்பி கவியரசன், உறவினர் வெங்கடேசப்பெருமாள் ஆகியோருடன் ராணி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார். இரவு 10.30 மணியளவில் அனைவரும் கடற்கரையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பைபாஸ் ரோடு விளையாட்டு ஸ்டேடியம் அருகில் ராணியின் ஸ்கூட்டர் பெட்ரோல் இன்றி நின்றுபோனது. அவ்வழியே பைக்கில் வந்து கொண்டிருந்த காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சக்தி, மூர்த்தி இருவரும் ராணியைப் பார்த்து அசிங்கமாக திட்டியுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட கவியரசனை இருவரும் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக ராணி தனது கணவர் மணிகண்டனுடன் காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தில் முறையிட்டார். பஞ்சாயத்தார் சக்தியையும், மூர்த்தியையும் அழைத்து கண்டித்தனர். ராணியிடம் வருத்தத்தையும் தெரிவித்தனர். அதன்பின் ராணி, மணிகண்டன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களுடன் கவியரசன், வெங்கடேசபெருமாள், ராணியின் மகள்கள் பிரியதர்சினி, ரஞ்சனி ஆகியோரும் வந்து கொண்டிருந்தனர். சுனாமி குடியிருப்பு வளைவு அருகே வந்தபோது காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சக்தி, மூர்த்தி, ஜீவா, ராமையன் ஆகியோர் ராணியை தகாத வார்த்தையால் திட்டினர். அதைத் தட்டிக்கேட்ட கவியரசர், வெங்கடேசப்பெருமாள் இருவரையும் இவர்கள் 4 பேர் தாக்கினர். இதில் காயமடைந்த கவியரசர், வெங்கடேசப்பெருமாள் இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து ராணி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: