ஆலங்குடி அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி விரைந்து முடிக்க வேண்டும்

வல்லம், ஜன.19: தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே உள்ளது சிவகாமிபுரம். இப்பகுதியில் பள்ளி தெரு அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. இதிலிருந்து வழங்கப்படும் தண்ணீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தாங்கும் தூண்கள் சிதிலமடைந்த உள்ளதால் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் சரியாக அமையாத காரணத்தினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தொடர்ந்து சிவகாமிபுரத்தில் உள்ள பள்ளி அருகிலேயே அதாவது தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க சிறிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே உள்ளதால் அப்பகுதியை இந்த குழந்தைகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் தொடர்ந்து பழுதடைந்து வருகிறது. எனவே புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டு பணிகளை முடுக்கி விட்டு உரிய நேரத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: