நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கபடுகிறது. இதில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பவார்கள்.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை(13ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால், சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சொர்க்கவாசல் திறப்பின்போது அதிகாலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை கட்டளைதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் கிடையாது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.