காஞ்சிபுரம்: ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலியாக. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு ஏதுவாக மாதந்தோறும் 2 மற்றும் 4வது செவ்வாய்க்கிழமைகளில் மருத்துவக்குழு வாயிலாக பரிசோதனை செய்து, தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை எதிரில் தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.