மானூரில் பள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் தபால் அலுவலக சுற்றுச்சுவர்

நெல்லை, ஜன. 12:  மானூரில் தொடக்கப்பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள தபால் அலுவலக சுற்றுச்சுவர் உடனடியாக அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். நெல்லை அருகே மானூரில் அரசு தொடக்கப்பள்ளி அருகே தபால் அலுவலக வளாகம் உள்ளது. இதன் பழைய கட்டிட சுற்றுச்சுவர் உடைந்து சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 95 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த சுவர் எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளதால் சுவற்றில் கயிற்றை கட்டி ஒரு அறிவிப்பு அட்டையை தொங்கவிட்டுள்ளனர். அதில் சுவர் பழுதாகி உள்ளதால் யாரும் அருகே செல்ல வேண்டாம் என எழுதப்பட்டு உள்ளது. இந்த சுவற்றை விபத்து நிகழும் முன்பு உடனடியாக அகற்றிட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: