மணப்பாடு பகுதியில் நாளை மின்தடை

உடன்குடி,ஜன.11: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மணப்பாடு பகுதிகளில் நாளை (12ம்தேதி) மின் விநியோகம் தடைபடும் என திருச்செந்தூர் மின் விநியோக பொறியாளர் ராம்மோகன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (12ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், கல்லாமொழி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், சிறுநாடார்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் ஒரு உயர் அழுத்த மின்இணைப்பிற்கும் நாளை காலை 8மணி முதல் பிற்பகல் 3மணி வரை  மின்சாரம் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.                    

Related Stories: