மதுரை, ஜன. 9: பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் குறைந்தால் புகார் தெரிவிக்கலாம், இதுவரை 43 சதவீத கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி, பருப்பு. முந்திரி, திராட்சை, வெல்லம், கரும்பு மற்றும் மஞ்சள் பை உட்பட ரூ.505 மதிப்பிலான 21 வகை மளிகைப் பொருட்கள் உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பை, அரிசி கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் 1,394 நியாய விலைக்கடைகளில் 9,17,537 குடும்ப அட்டைதார்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1718 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 9,19,255 அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.46,42,23,775 மதிப்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.