திண்டுக்கல், ஜன. 8:திண்டுக்கல் - கன்னிவாடி இடையே கொட்டப்பட்டி வழியாக இயக்கப்பட்ட அரசு நகரப் பஸ், கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொட்டபட்டி வழியாக கன்னிவாடிக்கு அரசு பேருந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. காலையில் கன்னிவாடியில் இருந்து வரக்கூடிய நகரப்பேருந்து 10:30 மணிக்கு தான் கொட்டப்பட்டிக்கு வருகிறது. இதனால், பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.