சுரண்டை, ஜன.8: வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் தாசில்தார் பட்டமுத்து தலைமையில் நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் சீனிபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீ.கே.புதூர் வருவாய் ஆய்வாளர் ராஜாத்தி வரவேற்றார். கூட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாஸ்க் அணிய வேண்டியதின் அவசியம், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளி, ஒமிக்கிரான் பரவலை தடுக்க அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறை கடைபிடித்தல் குறித்து தாசில்தார் பட்டமுத்து விளக்கினர். மேலும்நோய் தடுப்பு நடவடிக்கையில் வியாபாரிகளின் பங்கு முக்கியமானது.