கார் மோதி டிரைவர் படுகாயம்

ஆறுமுகநேரி, ஜன.8:  தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சுரேஷ்குமார்(30). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மற்றும் நண்பர்கள் 2பேர் சேர்ந்து ஒரே பைக்கில் தூத்துக்குடியில் இருந்து ஏரல் வந்துள்ளனர். அங்கு ஆற்றில் குளித்துவிட்டு பின்னர் 3 பேரும் ஒரே பைக்கில் தூத்துக்குடிக்கு சென்றனர்.

பழையக்காயல் அருகே செல்லும் போது எதிரே வந்த கார், இவர்களது பைக்கில் மோதியது. இதில் சுரேஷ்குமாருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் எஸ்ஐ ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் பால்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: