ஏரல், ஜன.8: வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலக்காப்பகத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாயர்புரம் நகர செயலாளர் அறவாழி தலைமை வகித்தார். ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், சிறுத்தொண்டநல்லூர் செயலாளர் கொற்கைமாறன் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் முதியோருக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.