காரியாபட்டி: காரியாபட்டி வட்டார விவசாயிகளுக்காக பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு காரியாபட்டி விவசாய அலுவலர் முருகேசன் தலைமையில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் வாசுகி, வினிதா, சுஜிதா, வைஷ்ணவி, ஜெய்த்தூன்சமீகா, முபிதா, வர்ஷினி ஆகியோர் கொண்ட குழுவினர் தேசிய விவசாய வளர்ச்சி நிரல் திட்டத்தின் கீழ் திரவ உயிர் உரங்களை வழங்கி நன்மை தீமைகள் பற்றி விளக்கிக் கூறினர்.