கோவை, ஜன.3: தமிழகத்தில் 6,350 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இங்கு தினமும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகிறது. மதுபான கடைகளில் மது விற்பனை செய்த பின்னர் இரவு நேரத்தில் பணம் கொண்டு போவதை கண்காணிக்கும் திருடர்கள் தாக்குதல் நடத்தி பணம் பறித்து செல்வது அவ்வப்போது நடக்கிறது. கடந்த ஆண்டில் 145 டாஸ்மாக் கடைகளில் திருட்டு, கொள்ளை நடந்தது. 23 டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக வழக்கு பதிவானது. வழிப்பறி ெகாள்ளையர்கள் கத்தி, அரிவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பது அதிகமானதால் ஊழியர்கள் அச்சமடைந்தனர்.