சத்தியமங்கலம், ஜன.3: பவானிசாகர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார். பவானிசாகர் அடுத்துள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(64). இவர் அருகேயுள்ள திருப்பதி கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் மதன்குமார் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே உள்ள திறந்த வெளி தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தார்.சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.