திண்டுக்கல்: கொரோனா காலத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது ஒப்பந்த காலம் முடிந்து பலர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்துள்ளதாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதாலும் ஒப்பந்தத பணியாளர்கள் நியமனத்தில் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.