பெரம்பலூர்,டிச.31: பெரம்பலூரில் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில், ஆங்கில புத்தாண்டையொட்டி 3 நாட்கள் கேக் திருவிழா துவங்கியது. நாளை (1ம் தேதி) வரை பெரம்பலுார் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் கேக் திருவிழா நடக்கிறது. இதில், நூற்றுக்காணக்கான மாடல்களில் மல்டி கலரில் கேக்குகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்தாண்டுக்கான ஆங்கில புத்தாண்டு நாளை பிறக்க உள்ளது. இந்த 2022ம் ஆண்டு பிறப்பையொட்டி, பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் கேக் திருவிழா நடத்த திட்டமிட்டது. இதன்படி, இந்த கேக் திருவிழா நேற்று (30ம் தேதி), இன்று (31ம் தேதி) மற்றும் நாளை (ஜன 1-ம் தேதி) ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இதனை, அஸ்வின்ஸ் குழும தலைவர் கேஆர்வி.கணேசன் குத்துவிளக்கேற்றி கேக் திருவிழாவை துவக்கி வைத்தார். முதல்விற்பனையை வள்ளலார் அரவிந்தன் தொடங்கிவைக்க, ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலர் விவேகானந்தன் பெற்றுக்கொண்டார்.